5/27/2010

உன் விழி பார்வையால்

எல்லோரா ஓவியமே
என் மனதின் காவியமே
காந்தக் கண்ணழகே
உன் விழி பார்வையால்
நான்....
அசைவில்லாமல் ஆடிக்கொண்டு இருக்கிறேன்
மவுனமாக பாடிக்கொண்டு இருக்கிறேன்
சத்தமில்லாமல் சிரித்துக்கொண்டு இருக்கிறேன்
வானத்தில் மிதந்துகொண்டு இருக்கிறேன்
கானத்தில் லயித்துகொண்டு இருக்கிறேன்
தூக்கத்தில் விழித்துக்கொண்டு இருக்கிறேன்
சாகாமல் பிறந்துகொண்டு இருக்கிறேன்!!!