சும்மா சும்மா பேசினோம்
சும்மா சும்மா சிரித்தோம்
சும்மா சும்மா நடந்தோம்
சும்மா சும்மா சண்டையிட்டோம்
இப்படி சும்மா சும்மா இருந்த
நம் மனதுக்கு
நீயில்லாத நான் சும்மாவையும்
நானில்லாத நீ சும்மாவையும்
சும்மா ஏற்றுக முடியல...
11/22/2009
நினைவெல்லாம் நீயடி
சத்தியமாய் சொல்கிறேன்
என் கனவுகளில் நீ வருவதில்லை!!!
சாகா வரம்பெற்ற உன் நினைவுகள்
என் இமைகளின் இடைவெளியை தூரம் போடுகிறது
தொலைந்துபோனா தூக்கத்தில் கனவுகள் சாத்தியமா???
என் கனவுகளில் நீ வருவதில்லை!!!
சாகா வரம்பெற்ற உன் நினைவுகள்
என் இமைகளின் இடைவெளியை தூரம் போடுகிறது
தொலைந்துபோனா தூக்கத்தில் கனவுகள் சாத்தியமா???
அதனால் சத்தியமாய் சொல்கிறேன்
என் கனவுகளில் நீ வருவதில்லை!!!
ரகம்
உதித்தவை
9/20/2009
முத்தம்
ஓராயிரம் கவிகள்
ஈராயிரம் பாக்கள்
மூவாயிரம் பக்கங்கள்
விளக்கமுடியாத வார்த்தை!!!
ஈராயிரம் பாக்கள்
மூவாயிரம் பக்கங்கள்
விளக்கமுடியாத வார்த்தை!!!
ரகம்
உதித்தவை
தெரியுமா
நேற்றைய நானும்
இன்றைய நானும்
வேறு வேறு தான்
எல்லாம் இந்த காதல்
செய்யும் மாயம் தெரியுமா???
இன்றைய நானும்
வேறு வேறு தான்
எல்லாம் இந்த காதல்
செய்யும் மாயம் தெரியுமா???
ரகம்
உதித்தவை
சாத்தியமா
விடியாத இரவுகள்
தூங்காத கனவுகள்மூடாத இமைகள்
நகராத நாட்கள்
சாத்தியமா???
முள்ளிலாத ரோஜா
மரணமிலாத ஜனனம்
துன்பமிலாத வாழ்க்கை
ஆசையிலாத மனிதன்
சாத்தியமா???
அதுபோல
உன்னை நினைக்காத
நானும் சாத்தியம் இல்லை
ரகம்
உதித்தவை
7/29/2009
சதிகாரி
வாய் திறந்து பேசினால்
வார்த்தைக்கு வலிக்கும் என்று
கண்களால் மட்டுமே பேசுகிறாயே கள்ளி
உன் கண்கள் பேசும் வார்த்தைகளின்
வலி தாங்காமல் போன
வாலிப இதயங்கள் உனக்கு
வைத்த பெயர்தானோ சதிகாரி !!!
சதிகாரியே அந்த
வாலிப இதயங்களுக்கு மட்டும்
வாய் இருந்தால் இன்று
கல்லரையில் காதல் பாஷை
பேசும் தாஜ்மகாலே நீதான் என்று
கற்பனைக்கும் எட்டாத கவியொன்றை
பாடித்தான் செல்லுமே !!!
பாமரனாய் பிறந்ததற்கு தனை
நிதம் நொந்த அந்த
வாலிப இதயங்கள் உன்
ஒய்யாரப் பார்வையால் இனி
வானத்திலே மிதந்திடும்
மாயாஜாலத்தை கற்றிடுமே!!!
உன் சிங்காரப் பார்வையில்
சிக்கிக்கொண்ட மனது
சர்வாதிகாரி ஹிட்லரிடம்
சொல்லியாவது சதிகாரி உன்னை
தன் இதயக்கோயிலில்
சிறையெடுக்க தவித்திடுமே!!!
உன் ஓரக்கண் பார்வைக்கு
கட்டுண்ட நெஞ்சம் ஒருகோடி
பட்டாம்பூச்சி பறக்கும் நந்தவனமாக
தன் இதயத்தை மாற்றி உன்னை
ஊஞ்சலாட்ட துடித்திடுமே!!!
சதிகாரியே நீயென்றாலும்
உன் காண்பார்வையில்
படுதலே கதியேனும்
கண்ணாமூச்சி ஆட்டத்தை
கணநேரமும் ஆடிடுமே!!!
ரகம்
உதித்தவை
7/26/2009
மழை
மேகத்துக்கும் காற்றுக்கும்
ஏற்பட்ட இராசயான காதலால்
பூவானம் வெந்நிர்த்துளிகளை
மண்ணுக்கு பரிசளித்து கொண்டிருக்க
மண்வாசனை எங்கும் பரிவிக்கொண்டிருக்கும்
மழை வந்த அந்த மாலை நேரத்தில்
உன் மூச்சுக்காற்று
என் மேல் மோத
மூர்ச்சையாகி போனது
என் உடல் மட்டுமல்ல
என் மனதும் கூடத்தான்!!!
அந்த வேளையில்…
மென்மையாய் என்னை
உன் மடியில் சாய்த்து
என் முகம் நிமிர்த்தி
வாயோடு வாயாக
உன் மூச்சுக்காற்றை
என்னிலே கொடுத்துக் கொண்டுருந்தாய்!!!
அந்த வசந்த வினாடி,
நீண்டு கொண்டே இருக்க வேண்டுமென்று
நான் கண்விழிக்காமல் அடம்பிடிக்க
அந்த ரம்யமான நொடியில்
அங்கு வந்த என் தாயை கண்டதும்
பொங்கி வழியும் வெட்க கண்களுடன்
நீ பேசிய வார்த்தைகள் !!!
எனக்கு நீதான் என்று என் தாய்
முடிவெடுக்க காரணமான
அந்த காட்சிகள் என
என்னால் மறக்க முடியாமல்
செய்துவிட்ட அந்த
மழையை
என்னால் மறக்கத்தான் முடியுமா!!!
ரகம்
உதித்தவை
தண்டனை
என் பதிவை படிக்கும் யாரேனும்
எனக்கு தண்டனை தருவதாய்
இருந்தால், அது உனக்குதான்
நதியிலே நிலவு தன் பிம்பத்தை
பதிவு செய்வதுபோல
என்னுள் உன் பிம்பத்தை
பதிவு செய்தது நீ தானே !!!
தண்டனை வேண்டாமென்றால்
உன் இதழ்களின் பதிவை
என் கன்னத்தில் பதித்துவிடேன்!!!
போனால் போகட்டும் என்று
என் பதிவை
உன் கன்னத்தில் மாத்திரம்
பதித்துவிடுகிரேன்!!!
ரகம்
உதித்தவை
7/21/2009
கவிதை
காகிதத்தில் மை இடப்பட்ட
வார்த்தைகளின் வர்ணஜாலம்
கவிதை என்றிருந்தேன்
உன்னை கண்ட பின்பு
வெற்று காகிதம் கூட
கவிதை சொல்கிறதே !!!
ரகம்
உதித்தவை
7/19/2009
வித்தியாசம்
தினசரி வாழ்க்கையிலிருந்து நீங்கள் எடுத்துக் கொள்கின்ற ஓய்வு - தூக்கம்.
உங்கள் வாழ்க்கையிலிருந்து நீங்கள் எடுத்தக் கொள்கின்ற ஓய்வு - மரணம்.
ரகம்
ரசித்தவை
7/12/2009
முரண்பாடு
வகுப்பறையில்
கற்றுத்தரப்பட்டு
தேர்வுகள் நடத்தப்படுகின்றன
வாழ்க்கையில்
தேர்வுகள் நடத்தப்பட்டு
கற்றுத்தரப்படுகிறது
ரகம்
உதித்தவை
நாகரிக கோமாளி
பக்கத்து ஊரில் இருக்கும்
மனைவிக்கு
முத்தத்தை
மின் அஞ்சல்
செய்துகொண்டுருக்கிறான்!!!
ரகம்
உதித்தவை
தொலைந்து போனவை
உன்னை
எங்கெங்கோ
தேடி அலைந்து
வீடு திரும்புகையில்
தொலைந்து போயிருக்கிறது
என்னுடைய
வாலிபக் கனவுகள்.
ரகம்
உதித்தவை
7/07/2009
தீவிரவாதம்
தீவிரவாதத்திற்கு காரணம்
அன்பில்லா நெஞ்சம்
ஆசை பேராசையாகமாறல்
இனிய நயவஞ்சக பேச்சுக்கள்
ஈட்டி போன்ற மனப்போக்கு
உச்சத்திற்கேரிய போதை
ஊக்கமூட்டும் கயவர்கள்
என்ன என்கின்ற விரக்தி
ஏன் என்று கேட்காத அறியாமை
ஐயம் உள்ள நபர்கள் மீது ஐயமற்ற நம்பிக்கை
ஒவ்வாத நட்பு
ஓயாத மனக்கசப்பு
ஒளவை சொல் கேளாத உலகம்
ஃறிணை மீது காதல்!!!
ஓவ்வொரு விடியலும்
ஒரு அர்த்தத்துடன்தான் விடிகிறது
உன் வாழ்க்கைக்கு மட்டும்அர்த்தமில்லாமல் போய்விடுமா என்ன???
வாழ்க்கை ஒருவருக்கு ஒருமுறை தான், அதை
வாழவிடாமல் தடம்புரட்டி,
உன்னை இடம் தெரியாமல்செய்துவிடும்,
இந்த தீவீரவாதத்தின் மீது
உனக்கென்ன காதல்????
ரோஜாவிற்கு முட்கள் உண்டு, ஆனால்
மனிதர்கள் விரும்புவது ரோஜாவின் இதழ்களை தான், அதுபோல
மனிதம் விரும்புவது உன் வளர்ச்சியை தானே அன்றி
வீழ்ச்சியை அல்ல!!!!
வீழ்ந்து கிடப்பது மடமை தான், ஆனால்
தீவிரவாதம் நீ எழுந்து நிற்பதற்கு
ஊன்றுகோள் அல்ல!!!
நட்பு என்னும் பெயரால் முகமூடிபோட்டு
தீவிரவாதம் நடத்துவதை நீயாகவே நிறுத்திக்கொள்
அதன் தாக்கம் தாளாமல் நீ அழிந்துபோவாய்!!!!
நாங்கள் விரும்புவது உன் அழிவை அல்ல
தூய்மையான நட்பை மட்டுமே!!!!
ரகம்
உதித்தவை