11/22/2009

சும்மா

சும்மா சும்மா பேசினோம்
சும்மா சும்மா சிரித்தோம்
சும்மா சும்மா நடந்தோம்
சும்மா சும்மா சண்டையிட்டோம்
இப்படி சும்மா சும்மா இருந்த
நம் மனதுக்கு
நீயில்லாத நான் சும்மாவையும்
நானில்லாத நீ சும்மாவையும்
சும்மா ஏற்றுக முடியல...

நினைவெல்லாம் நீயடி


சத்தியமாய் சொல்கிறேன்
என் கனவுகளில் நீ வருவதில்லை!!!
சாகா வரம்பெற்ற உன் நினைவுகள்
என் இமைகளின் இடைவெளியை தூரம் போடுகிறது
தொலைந்துபோனா தூக்கத்தில் கனவுகள் சாத்தியமா???

அதனால் சத்தியமாய் சொல்கிறேன்
என் கனவுகளில் நீ வருவதில்லை!!!


9/20/2009

முத்தம்

ஓராயிரம் கவிகள்
ஈராயிரம் பாக்கள்
மூவாயிரம் பக்கங்கள்
விளக்கமுடியாத வார்த்தை!!!

தெரியுமா

நேற்றைய நானும்
இன்றைய நானும்
வேறு வேறு தான்
எல்லாம் இந்த காதல்
செய்யும் மாயம் தெரியுமா???

சாத்தியமா

விடியாத இரவுகள்
தூங்காத கனவுகள்
மூடாத இமைகள்
நகராத நாட்கள்
சாத்தியமா???

முள்ளிலாத ரோஜா
மரணமிலாத ஜனனம்
துன்பமிலாத வாழ்க்கை
ஆசையிலாத மனிதன்
சாத்தியமா???

அதுபோல
உன்னை நினைக்காத
நானும் சாத்தியம் இல்லை

7/29/2009

சதிகாரி

வாய் திறந்து பேசினால் வார்த்தைக்கு வலிக்கும் என்று கண்களால் மட்டுமே பேசுகிறாயே கள்ளி உன் கண்கள் பேசும் வார்த்தைகளின் வலி தாங்காமல் போன வாலிப இதயங்கள் உனக்கு வைத்த பெயர்தானோ சதிகாரி !!!
சதிகாரியே அந்த வாலிப இதயங்களுக்கு மட்டும் வாய் இருந்தால் இன்று கல்லரையில் காதல் பாஷை பேசும் தாஜ்மகாலே நீதான் என்று கற்பனைக்கும் எட்டாத கவியொன்றை பாடித்தான் செல்லுமே !!!
பாமரனாய் பிறந்ததற்கு தனை நிதம் நொந்த அந்த வாலிப இதயங்கள் உன் ஒய்யாரப் பார்வையால் இனி வானத்திலே மிதந்திடும் மாயாஜாலத்தை கற்றிடுமே!!!
உன் சிங்காரப் பார்வையில் சிக்கிக்கொண்ட மனது சர்வாதிகாரி ஹிட்லரிடம் சொல்லியாவது சதிகாரி உன்னை தன் இதயக்கோயிலில் சிறையெடுக்க தவித்திடுமே!!!
உன் ஓரக்கண் பார்வைக்கு கட்டுண்ட நெஞ்சம் ஒருகோடி பட்டாம்பூச்சி பறக்கும் நந்தவனமாக தன் இதயத்தை மாற்றி உன்னை ஊஞ்சலாட்ட துடித்திடுமே!!!
சதிகாரியே நீயென்றாலும் உன் காண்பார்வையில் படுதலே கதியேனும் கண்ணாமூச்சி ஆட்டத்தை கணநேரமும் ஆடிடுமே!!!

7/26/2009

மழை

மேகத்துக்கும் காற்றுக்கும் ஏற்பட்ட இராசயான காதலால் பூவானம் வெந்நிர்த்துளிகளை மண்ணுக்கு பரிசளித்து கொண்டிருக்க மண்வாசனை எங்கும் பரிவிக்கொண்டிருக்கும் மழை வந்த அந்த மாலை நேரத்தில் உன் மூச்சுக்காற்று என் மேல் மோத மூர்ச்சையாகி போனது என் உடல் மட்டுமல்ல என் மனதும் கூடத்தான்!!! அந்த வேளையில்… மென்மையாய் என்னை உன் மடியில் சாய்த்து என் முகம் நிமிர்த்தி வாயோடு வாயாக உன் மூச்சுக்காற்றை என்னிலே கொடுத்துக் கொண்டுருந்தாய்!!! அந்த வசந்த வினாடி, நீண்டு கொண்டே இருக்க வேண்டுமென்று நான் கண்விழிக்காமல் அடம்பிடிக்க அந்த ரம்யமான நொடியில் அங்கு வந்த என் தாயை கண்டதும் பொங்கி வழியும் வெட்க கண்களுடன் நீ பேசிய வார்த்தைகள் !!! எனக்கு நீதான் என்று என் தாய் முடிவெடுக்க காரணமான அந்த காட்சிகள் என என்னால் மறக்க முடியாமல் செய்துவிட்ட அந்த மழையை என்னால் மறக்கத்தான் முடியுமா!!!

தண்டனை

என் பதிவை படிக்கும் யாரேனும்
எனக்கு தண்டனை தருவதாய்
இருந்தால், அது உனக்குதான்
நதியிலே நிலவு தன் பிம்பத்தை
பதிவு செய்வதுபோல
என்னுள் உன் பிம்பத்தை
பதிவு செய்தது நீ தானே !!!
தண்டனை வேண்டாமென்றால்
உன் இதழ்களின் பதிவை
என் கன்னத்தில் பதித்துவிடேன்!!!
போனால் போகட்டும் என்று
என் பதிவை
உன் கன்னத்தில் மாத்திரம்
தித்துவிடுகிரேன்!!!

காதல்

எனக்கும் உனக்கும்
பிறந்த குழந்தையின்
பெயர்தானே!!!

திருவிழா

தினம் தினம் திருவிழா
தேவதைகள் பவனி வரும்
கல்லூரிகளில்!!!

இரவு

நீ நான் நம் எதிர்காலம் என பேசி நிட்டித்த இரவுகளின் நினைவுகளை சுமந்த கனவுகளால் நிட்டித்துக் கொண்டிருக்கிறது இன்றைய இரவு!!!

காதல் வரும் தருணம்

கண்களை மட்டுமே பார்த்து பேசிய இவர்களுக்கு இன்று அது சாத்தியப்படவில்லை!!!

7/21/2009

கவிதை

காகிதத்தில் மை இடப்பட்ட வார்த்தைகளின் வர்ணஜாலம் கவிதை என்றிருந்தேன் உன்னை கண்ட பின்பு வெற்று காகிதம் கூட கவிதை சொல்கிறதே !!!

மௌனம்

வானம் வசப்பட்ட எனக்கு வார்த்தைகள் வசப்படவில்லை உன்னிடம் பேச!!!

7/19/2009

வித்தியாசம்

தினசரி வாழ்க்கையிலிருந்து நீங்கள் எடுத்துக் கொள்கின்ற ஓய்வு - தூக்கம். உங்கள் வாழ்க்கையிலிருந்து நீங்கள் எடுத்தக் கொள்கின்ற ஓய்வு - மரணம்.

7/12/2009

முரண்பாடு

வகுப்பறையில் கற்றுத்தரப்பட்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன வாழ்க்கையில் தேர்வுகள் நடத்தப்பட்டு கற்றுத்தரப்படுகிறது

மரணம்

வாழ்க்கையின் தேடல் அறுவடை செய்யப்படும் மந்திரச் சொல்.

நாகரிக கோமாளி

பக்கத்து ஊரில் இருக்கும் மனைவிக்கு முத்தத்தை மின் அஞ்சல் செய்துகொண்டுருக்கிறான்!!!

தொலைந்து போனவை

உன்னை எங்கெங்கோ தேடி அலைந்து வீடு திரும்புகையில் தொலைந்து போயிருக்கிறது என்னுடைய வாலிபக் கனவுகள்.

7/07/2009

தீவிரவாதம்

தீவிரவாதத்திற்கு காரணம் அன்பில்லா நெஞ்சம் ஆசை பேராசையாகமாறல் இனிய நயவஞ்சக பேச்சுக்கள் ஈட்டி போன்ற மனப்போக்கு உச்சத்திற்கேரிய போதை ஊக்கமூட்டும் கயவர்கள் என்ன என்கின்ற விரக்தி ஏன் என்று கேட்காத அறியாமை ஐயம் உள்ள நபர்கள் மீது ஐயமற்ற நம்பிக்கை ஒவ்வாத நட்பு ஓயாத மனக்கசப்பு ஒளவை சொல் கேளாத உலகம் ஃறிணை மீது காதல்!!! ஓவ்வொரு விடியலும் ஒரு அர்த்தத்துடன்தான் விடிகிறது உன் வாழ்க்கைக்கு மட்டும்அர்த்தமில்லாமல் போய்விடுமா என்ன??? வாழ்க்கை ஒருவருக்கு ஒருமுறை தான், அதை வாழவிடாமல் தடம்புரட்டி, உன்னை இடம் தெரியாமல்செய்துவிடும், இந்த தீவீரவாதத்தின் மீது உனக்கென்ன காதல்???? ரோஜாவிற்கு முட்கள் உண்டு, ஆனால் மனிதர்கள் விரும்புவது ரோஜாவின் இதழ்களை தான், அதுபோல மனிதம் விரும்புவது உன் வளர்ச்சியை தானே அன்றி வீழ்ச்சியை அல்ல!!!! வீழ்ந்து கிடப்பது மடமை தான், ஆனால் தீவிரவாதம் நீ எழுந்து நிற்பதற்கு ஊன்றுகோள் அல்ல!!! நட்பு என்னும் பெயரால் முகமூடிபோட்டு தீவிரவாதம் நடத்துவதை நீயாகவே நிறுத்திக்கொள் அதன் தாக்கம் தாளாமல் நீ அழிந்துபோவாய்!!!! நாங்கள் விரும்புவது உன் அழிவை அல்ல தூய்மையான நட்பை மட்டுமே!!!!

7/06/2009

தாய்

வார்த்தைகளால் வார்த்தெடுக்கபடாத அன்பின் அட்சய பாத்திரம்