7/26/2009
மழை
மேகத்துக்கும் காற்றுக்கும்
ஏற்பட்ட இராசயான காதலால்
பூவானம் வெந்நிர்த்துளிகளை
மண்ணுக்கு பரிசளித்து கொண்டிருக்க
மண்வாசனை எங்கும் பரிவிக்கொண்டிருக்கும்
மழை வந்த அந்த மாலை நேரத்தில்
உன் மூச்சுக்காற்று
என் மேல் மோத
மூர்ச்சையாகி போனது
என் உடல் மட்டுமல்ல
என் மனதும் கூடத்தான்!!!
அந்த வேளையில்…
மென்மையாய் என்னை
உன் மடியில் சாய்த்து
என் முகம் நிமிர்த்தி
வாயோடு வாயாக
உன் மூச்சுக்காற்றை
என்னிலே கொடுத்துக் கொண்டுருந்தாய்!!!
அந்த வசந்த வினாடி,
நீண்டு கொண்டே இருக்க வேண்டுமென்று
நான் கண்விழிக்காமல் அடம்பிடிக்க
அந்த ரம்யமான நொடியில்
அங்கு வந்த என் தாயை கண்டதும்
பொங்கி வழியும் வெட்க கண்களுடன்
நீ பேசிய வார்த்தைகள் !!!
எனக்கு நீதான் என்று என் தாய்
முடிவெடுக்க காரணமான
அந்த காட்சிகள் என
என்னால் மறக்க முடியாமல்
செய்துவிட்ட அந்த
மழையை
என்னால் மறக்கத்தான் முடியுமா!!!
ரகம்
உதித்தவை
3 கருத்துக்கள்:
Excelent kathir....I really like it. You have used very good words...
அழகாய் பெய்துள்ளது உங்களுக்கான அந்த மழை
அந்தி மழை
அந்த மாலை.
Nice "KAVITHAI"...and from where are you getting these pictures man? and new Layout of this blog is very nice.
Post a Comment