7/07/2009

தீவிரவாதம்

தீவிரவாதத்திற்கு காரணம் அன்பில்லா நெஞ்சம் ஆசை பேராசையாகமாறல் இனிய நயவஞ்சக பேச்சுக்கள் ஈட்டி போன்ற மனப்போக்கு உச்சத்திற்கேரிய போதை ஊக்கமூட்டும் கயவர்கள் என்ன என்கின்ற விரக்தி ஏன் என்று கேட்காத அறியாமை ஐயம் உள்ள நபர்கள் மீது ஐயமற்ற நம்பிக்கை ஒவ்வாத நட்பு ஓயாத மனக்கசப்பு ஒளவை சொல் கேளாத உலகம் ஃறிணை மீது காதல்!!! ஓவ்வொரு விடியலும் ஒரு அர்த்தத்துடன்தான் விடிகிறது உன் வாழ்க்கைக்கு மட்டும்அர்த்தமில்லாமல் போய்விடுமா என்ன??? வாழ்க்கை ஒருவருக்கு ஒருமுறை தான், அதை வாழவிடாமல் தடம்புரட்டி, உன்னை இடம் தெரியாமல்செய்துவிடும், இந்த தீவீரவாதத்தின் மீது உனக்கென்ன காதல்???? ரோஜாவிற்கு முட்கள் உண்டு, ஆனால் மனிதர்கள் விரும்புவது ரோஜாவின் இதழ்களை தான், அதுபோல மனிதம் விரும்புவது உன் வளர்ச்சியை தானே அன்றி வீழ்ச்சியை அல்ல!!!! வீழ்ந்து கிடப்பது மடமை தான், ஆனால் தீவிரவாதம் நீ எழுந்து நிற்பதற்கு ஊன்றுகோள் அல்ல!!! நட்பு என்னும் பெயரால் முகமூடிபோட்டு தீவிரவாதம் நடத்துவதை நீயாகவே நிறுத்திக்கொள் அதன் தாக்கம் தாளாமல் நீ அழிந்துபோவாய்!!!! நாங்கள் விரும்புவது உன் அழிவை அல்ல தூய்மையான நட்பை மட்டுமே!!!!

0 கருத்துக்கள்: