வாய் திறந்து பேசினால்
வார்த்தைக்கு வலிக்கும் என்று
கண்களால் மட்டுமே பேசுகிறாயே கள்ளி
உன் கண்கள் பேசும் வார்த்தைகளின்
வலி தாங்காமல் போன
வாலிப இதயங்கள் உனக்கு
வைத்த பெயர்தானோ சதிகாரி !!!
சதிகாரியே அந்த
வாலிப இதயங்களுக்கு மட்டும்
வாய் இருந்தால் இன்று
கல்லரையில் காதல் பாஷை
பேசும் தாஜ்மகாலே நீதான் என்று
கற்பனைக்கும் எட்டாத கவியொன்றை
பாடித்தான் செல்லுமே !!!
பாமரனாய் பிறந்ததற்கு தனை
நிதம் நொந்த அந்த
வாலிப இதயங்கள் உன்
ஒய்யாரப் பார்வையால் இனி
வானத்திலே மிதந்திடும்
மாயாஜாலத்தை கற்றிடுமே!!!
உன் சிங்காரப் பார்வையில்
சிக்கிக்கொண்ட மனது
சர்வாதிகாரி ஹிட்லரிடம்
சொல்லியாவது சதிகாரி உன்னை
தன் இதயக்கோயிலில்
சிறையெடுக்க தவித்திடுமே!!!
உன் ஓரக்கண் பார்வைக்கு
கட்டுண்ட நெஞ்சம் ஒருகோடி
பட்டாம்பூச்சி பறக்கும் நந்தவனமாக
தன் இதயத்தை மாற்றி உன்னை
ஊஞ்சலாட்ட துடித்திடுமே!!!
சதிகாரியே நீயென்றாலும்
உன் காண்பார்வையில்
படுதலே கதியேனும்
கண்ணாமூச்சி ஆட்டத்தை
கணநேரமும் ஆடிடுமே!!!