சும்மா சும்மா பேசினோம்
சும்மா சும்மா சிரித்தோம்
சும்மா சும்மா நடந்தோம்
சும்மா சும்மா சண்டையிட்டோம்
இப்படி சும்மா சும்மா இருந்த
நம் மனதுக்கு
நீயில்லாத நான் சும்மாவையும்
நானில்லாத நீ சும்மாவையும்
சும்மா ஏற்றுக முடியல...
11/22/2009
நினைவெல்லாம் நீயடி
சத்தியமாய் சொல்கிறேன்
என் கனவுகளில் நீ வருவதில்லை!!!
சாகா வரம்பெற்ற உன் நினைவுகள்
என் இமைகளின் இடைவெளியை தூரம் போடுகிறது
தொலைந்துபோனா தூக்கத்தில் கனவுகள் சாத்தியமா???
என் கனவுகளில் நீ வருவதில்லை!!!
சாகா வரம்பெற்ற உன் நினைவுகள்
என் இமைகளின் இடைவெளியை தூரம் போடுகிறது
தொலைந்துபோனா தூக்கத்தில் கனவுகள் சாத்தியமா???
அதனால் சத்தியமாய் சொல்கிறேன்
என் கனவுகளில் நீ வருவதில்லை!!!
ரகம்
உதித்தவை
9/20/2009
முத்தம்
ஓராயிரம் கவிகள்
ஈராயிரம் பாக்கள்
மூவாயிரம் பக்கங்கள்
விளக்கமுடியாத வார்த்தை!!!
ஈராயிரம் பாக்கள்
மூவாயிரம் பக்கங்கள்
விளக்கமுடியாத வார்த்தை!!!
ரகம்
உதித்தவை
தெரியுமா
நேற்றைய நானும்
இன்றைய நானும்
வேறு வேறு தான்
எல்லாம் இந்த காதல்
செய்யும் மாயம் தெரியுமா???
இன்றைய நானும்
வேறு வேறு தான்
எல்லாம் இந்த காதல்
செய்யும் மாயம் தெரியுமா???
ரகம்
உதித்தவை
சாத்தியமா
விடியாத இரவுகள்
தூங்காத கனவுகள்மூடாத இமைகள்
நகராத நாட்கள்
சாத்தியமா???
முள்ளிலாத ரோஜா
மரணமிலாத ஜனனம்
துன்பமிலாத வாழ்க்கை
ஆசையிலாத மனிதன்
சாத்தியமா???
அதுபோல
உன்னை நினைக்காத
நானும் சாத்தியம் இல்லை
ரகம்
உதித்தவை
7/29/2009
சதிகாரி

வாய் திறந்து பேசினால்
வார்த்தைக்கு வலிக்கும் என்று
கண்களால் மட்டுமே பேசுகிறாயே கள்ளி
உன் கண்கள் பேசும் வார்த்தைகளின்
வலி தாங்காமல் போன
வாலிப இதயங்கள் உனக்கு
வைத்த பெயர்தானோ சதிகாரி !!!


பாமரனாய் பிறந்ததற்கு தனை
நிதம் நொந்த அந்த
வாலிப இதயங்கள் உன்
ஒய்யாரப் பார்வையால் இனி
வானத்திலே மிதந்திடும்
மாயாஜாலத்தை கற்றிடுமே!!!



ரகம்
உதித்தவை
7/26/2009
மழை
மேகத்துக்கும் காற்றுக்கும்
ஏற்பட்ட இராசயான காதலால்
பூவானம் வெந்நிர்த்துளிகளை
மண்ணுக்கு பரிசளித்து கொண்டிருக்க
மண்வாசனை எங்கும் பரிவிக்கொண்டிருக்கும்
மழை வந்த அந்த மாலை நேரத்தில்
உன் மூச்சுக்காற்று
என் மேல் மோத
மூர்ச்சையாகி போனது
என் உடல் மட்டுமல்ல
என் மனதும் கூடத்தான்!!!
அந்த வேளையில்…
மென்மையாய் என்னை
உன் மடியில் சாய்த்து
என் முகம் நிமிர்த்தி
வாயோடு வாயாக
உன் மூச்சுக்காற்றை
என்னிலே கொடுத்துக் கொண்டுருந்தாய்!!!
அந்த வசந்த வினாடி,
நீண்டு கொண்டே இருக்க வேண்டுமென்று
நான் கண்விழிக்காமல் அடம்பிடிக்க
அந்த ரம்யமான நொடியில்
அங்கு வந்த என் தாயை கண்டதும்
பொங்கி வழியும் வெட்க கண்களுடன்
நீ பேசிய வார்த்தைகள் !!!
எனக்கு நீதான் என்று என் தாய்
முடிவெடுக்க காரணமான
அந்த காட்சிகள் என
என்னால் மறக்க முடியாமல்
செய்துவிட்ட அந்த
மழையை
என்னால் மறக்கத்தான் முடியுமா!!!
ரகம்
உதித்தவை
தண்டனை
என் பதிவை படிக்கும் யாரேனும்
எனக்கு தண்டனை தருவதாய்
இருந்தால், அது உனக்குதான்
நதியிலே நிலவு தன் பிம்பத்தை
பதிவு செய்வதுபோல
என்னுள் உன் பிம்பத்தை
பதிவு செய்தது நீ தானே !!!
தண்டனை வேண்டாமென்றால்
உன் இதழ்களின் பதிவை
என் கன்னத்தில் பதித்துவிடேன்!!!

போனால் போகட்டும் என்று
என் பதிவை
உன் கன்னத்தில் மாத்திரம்
பதித்துவிடுகிரேன்!!!

ரகம்
உதித்தவை
7/21/2009
கவிதை

ரகம்
உதித்தவை
7/19/2009
வித்தியாசம்
தினசரி வாழ்க்கையிலிருந்து நீங்கள் எடுத்துக் கொள்கின்ற ஓய்வு - தூக்கம்.
உங்கள் வாழ்க்கையிலிருந்து நீங்கள் எடுத்தக் கொள்கின்ற ஓய்வு - மரணம்.
ரகம்
ரசித்தவை
7/12/2009
முரண்பாடு
வகுப்பறையில்
கற்றுத்தரப்பட்டு
தேர்வுகள் நடத்தப்படுகின்றன
வாழ்க்கையில்
தேர்வுகள் நடத்தப்பட்டு
கற்றுத்தரப்படுகிறது
ரகம்
உதித்தவை
நாகரிக கோமாளி
பக்கத்து ஊரில் இருக்கும்
மனைவிக்கு
முத்தத்தை
மின் அஞ்சல்
செய்துகொண்டுருக்கிறான்!!!
ரகம்
உதித்தவை
தொலைந்து போனவை
உன்னை
எங்கெங்கோ
தேடி அலைந்து
வீடு திரும்புகையில்
தொலைந்து போயிருக்கிறது
என்னுடைய
வாலிபக் கனவுகள்.
ரகம்
உதித்தவை
7/07/2009
தீவிரவாதம்








ரகம்
உதித்தவை